வியாழன், 25 ஜூலை, 2013



முக நூல் -
அழுது சிவக்கும் !

அழுக்கடைந்த்
சில -
மனித ஆத்மாக்களின் எழுத்துக்கள்
அங்கேயும்
கழிவு நீரை கொட்டுவதால் !

பொறாமை உள்ளங்களின் திமீரினால்-
எழுதப்பட்ட
எழுத்து வரிகளுக்கு
விமர்னங்ககளும்
கேள்விக் கூறிதான் .

பட்டம் பதவிக்காய்
பெயர் புகழுக்காய்
கலையுலகில்
நடமாடிக் கொண்டிருக்கும்
ஹீரோக்கள் -
வெளியீட்டு விழாக்களில்
சீதனக்கவிதைகளை
நூலாக்கும்
!

விமர்சன வெப்பம்
பார்க்க முடியாமல்
கேட்க்க முடியாமல்
வியர்வைக் கசிவுகளாய்
நரம்புகளும் உடலிலிருந்து
வெடித்துச் சிதறி
இலக்கிய வெளிகளில்
அமிழ்ந்து போகும்
புதைந்து மறையும்!

தரம் நிறைந்த
நல்ல எழுத்துக்களை (எழுத்தாளர்களை )
கீரியும் -பாம்புமாய்
பொறாமை உள்ளங்கள்
போராடி மாயும் !
பய்ம்காட்டிநிற்கும் !!

கற்பனைகளின் துளிகள் (வரிகள் )
உற்றெடுக்கும் -
தூரம் வரையில் .....
உள்ளத்தின் காயங்கள்
தடித்துக் கொண்டிருக்கும் !
(வீங்கிக்கொண்டிருக்கும் !!)

விரைவில்
பேனாக்களின்
மைத் துளிகளிருந்து
முக நூல் அசிங்கங்கள்வெளியாகும்
நட்புறவுகள் யாவும்
காணாமல் போன பின் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக