செவ்வாய், 30 ஜூலை, 2013



அல்லாஹ்வின் ரஹ்மத்தை
யாசித்து கேட்கும்
உண்மை முஸ்லீங்கள் ,
நாங்கள் !

பரிசுத்த குர் ஆணை
தஜ்வீத் முறையினால்
ஓதி வரும்
ஹாபீஷ்க்கள்

கியாமத் வாழ்வுக்காய்
அமல்களை தேடும்
இவ்வுலகின் பக்தர்கள்

இளமை ஊஞ்சலாடும்
வாலிப வயசுகளில்
தீனை போதிக்கும்
நல்லடியார்கள்

இறை இல்லங்களில்
நாளெல்லாம் தஃவாவை தரிசிக்கும்
இறையடியார்களின்
காவலாளிகள்

தௌபா செய்யப்பட்ட
பரி சுத்தமான மனதுடன்
நன்மையான் செயல்களை
உள்ளத்தால் தேடி
முன்னேறும் ஈமானியர்கள்

அறியாமை ஜீவன்களுக்கு
அறிவூட்டும் -
மார்க்க போதகர்கள்

வேதம் புரியாத
கல்ப் களினால்
வாழ்வின் இலட்சியங்கள்
மாறிப் போகும்


இஸ்லாமிய பூங்காவில்
மலரும் பூக்களுக்கு
வாசம் வீச வைக்கும்
அடி வேர்கள்
நாங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக