புதன், 17 ஜூலை, 2013




பணத்தைக் கண்டால் 

குணம் மாறிப் போகும் 

அது 

மனிதரை மட்டும் 

தேடிக் கொள்லும் !

தடவிக் கொள்லும் !!

பணம் -

இல்லாவிட்டாலும் தேடிக் கொள்ளலாம்

குணமில்லாவிட்டால் ?

பணம் பிணமாக மாறும்

பிணம் பணமாக மாறும்

குணம் -

எதுவாக மாறும்?

பணத்தை தேடிப் பெற

படைக்கப்பட்டவர்கள் நாம்
குணத்தை பெற்றுக் கொடுக்க
படைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்!

அது -நீரில் ஒரு தாமரை
கலங்கினால்
மனிதருக்காக ஏங்குவதில்லை

நாம் -
மனிதப் பிறவிகள்
குணம் மாறினால்
ஆத்ம திருப்தியோடு வாழத் தான் முடியுமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக