திங்கள், 8 ஜூலை, 2013

                                          



மனசு 
அழுது தீர்க்கும் 

போட்டி -பொறாமை 
வெடித்துச் சிதறும் !
வெந்து கருகும் !!

அழுக்கடைந்த
மானுட இதயங்கள்
பாழாய்ப் போன நய வஞ்சக குணங்கள்
திமிறு பிடித்த பிடிவாதங்கள்
உள்ளத்தில் -
அழுத்துப் பதிந்துள்ளதனால் !

சாதி வெறிகளினால்
வளர்க்கப்பட்ட
மனிதாபிமானங்களுக்கு
சுதந்திரக் காற்றும்
எட்டாப் பழத்துக்கு கொட்டாவி(விட்டது ) விடுவது போலத்தான்!

நட்புக் காற்றுக்காய்
முக நூல் பக்கத்தில்
வந்து கொண்டிருக்கும்
சில -
சர்வதேச உறவுகள்
போலி முகவரிகளில்
துய இதயங்களை
நாசமாக்கும் !

கருத்து சுதந்திரம்
புரிய முடியாமல்
பேனாவின் கசிவுகளாய்
எழுத்துக்களும் இதயத்திலிருந்து
வெடித்து விழுந்து
சிதறிப் பரந்து
மமதைகளின் மனங்களில்
புதைந்து போகும்!

நேர்மை
எழுத்துக்களை சுமர்(ந்)த
விமர்சன வரிகளை
சுரண்டல் கரையான்களும்
அழித்தொழிக்கும் !

எழுத்தாளர்களின் சிந்தனைகள்
ஊறிச் சுரக்கும்
ஊற்று வரை -
பேனாவின் துளிகள்
எழுதிக் கொண்டிருக்கும் !

விரைவில்
போலி உள்ளனக்ளின்
கருத்துக்களிலிருந்து
கவிதைகள் வேறுபடும்

தாக்கி எழுதுவோர்
தாங்கிப் பிடிக்காத வரை !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக