சனி, 24 ஆகஸ்ட், 2013

தமிழே வாழி



வள்ளுவன் இளங்கோ கம்பன் ,
வழி தனில் புலவர் கோடி !
தெள்ளிய கவிதை பாடி
தென்னச் சுவைக்க !நாமும் !
அள்ளியே ! பருகி இன்ப !
அருவியில் குளித்து நித்தம் 
தொல்லைகள் மறக்க வைக்கும்
சுந்த்தரத் தமிழே வாழி !


பாரதி உமறு ! நல்ல
இலந்தை பாரதி தாசன் ,போன்றோ
ஆரமாய்ச் சூடி யுன்னை
அழவிலா இன்பங் கண்டார்
சேர்ந்திடும் வறுமைத் துன்பம் !
சிதைவுறு வாழ்க்கை கண்டும்
சோர்ந்திடாது துன்னைப் பாடி
சுகம் பல கண்டாள் அம்மா !


வாழ்வினைத் துறந்தோர் கூட
வடிவுனைத் துறந்தா ரில்லை
தாழ்விலா நிலையி லிந்தத்
தரரணியோர் புகழ்ந்து போற்றும்
நீள் பழம் பெருமை யோடு
நித்தமும் வாழு மெங்கள் !
வீழ்வுறா மொழியே !என்றும்
வீறுடன் வாழ்க நீடே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக