வியாழன், 15 ஆகஸ்ட், 2013

உலகியல் ஞானம்





நேர்மையின் விலகல்கள்
உண்மைகளை  மறைக்கும்

போலி வேஷங்கள்   
நாசத்தின் கருவாகி
நடைபோடும்

தொடர்பறுந்த
சுகங்களைத் தேடி
மனித உயிர்
மண்டையைப் பிளக்கும் 

வாக்குகளை வாதமாக்கி
உலகியல்
 ஞானம்  புதைக்கும்.

எழுத்து  வீரம்
எளிதில்  மறையும் 

நிறமாறுதலும்
நெளிந்த  கோஷங்களும்
நேர்மைப்  பிளமபில்
கருகிப் போக
கவிதை  பிறக்கும் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக