வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நீ...!



சகீ  
அழாத என்னைக் கூட 
அழ வைத்து விட்டுச் சென்று விட்டாயே !
இன்று 
நான் சிந்தி வடிக்கும் கண்ணீரும் 
உன் 
கண்ணீர் துளியென்பதை 
நீ அறியவில்லையா?
அல்லது -
புரிந்தும் புரியாமலா ?

ஆயிரம்தான் உறவுகள் வந்தாலும் 
உனக்கு  நானும் 
எனக்கு நீயும் தான்
உறவு !
நமக்கான நட்புறவில் 
தாய் மண்ணின் பிரசவமும் ஒன்று
நீ-
சுவாசித்து விட்டுபோவதுபோல
அதுவும் தடவிவிட்டுச் செல்லும்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக