வியாழன், 15 ஆகஸ்ட், 2013




சிந்தனைகளை சிதறியபடி 
கலையுலகில் 
பவனி வரும் கவியாத்மாக்களே 
உங்கள் பேனாவில் 
உயுர் லட்சியத்தையும் 
ஊற்றிக் கொள்ளுங்கள் !

உலகிலெங்கும் 
பெண்மை 
அவமானப்படுத்தப்படுகின்றது 
அந்த-கேவலம் 
கவிதைவரிகளில் 
உங்கள்  எழுத்துக்களையும் தழுவாமலிருக்கட்டும் !

நம் 
பேனா முனைகள் 
போர் வீரர்களின் துப்பாக்கி முனையை விட 
சக்தி வாய்ந்தவைகள் 

பெண்மையை மதிக்காது மிதிக்கும்சிலகயவர்களின் இடியை 
தாங்கிக் கொள்ளவும் 
சுமந்து கொள்ளவும் 
ஓராயிரம் 
தைரியத்தை 
ஏற்படுத்திக் கொடு !

அத்துடன்
கண்ணகியாய் 
ஒளவையாய்
சீதையாய் 
மாதவியாய் 
நாளாயினியாய் 
பெண்ணினத்திற்கு பெருமை பெற்றுத் தந்த முன்னோர்களின் பாதையில் 
உன்னை நீயே 
நகர்திக் கொள் !

அதில் போவது நானாகவும் இருக்கலாம் 
மனிதவுள்ளங்களாகவும் இருக்கலாம் 
பேயாகவும் இருக்கலாம் 
பிசாசசாகவும் இருக்கலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக