வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தேசம்




காலை பொழுதெல்லாம் 
கறுத்துப் போனதாகவே 
விழித்துக்கொள்ளும் 
 தேசமிது 

தேசத்தின் தேகமெல்லாம் 
இப்போது -
விலையெற்றத்தின் கொடுமை 

வறுமை இங்கேயே 
அகதி முகாம்களில் இருந்து கொள்வதாக 
அடம் பிடிக்கிறது 

செத்துப் போக முன்னரே 
காப்பாற்றப் பட வேண்டும் 
பெண் புறாக்கள் 
வேட்டையாடப் படும் 
விந்தை 
இங்கே விசித்திரமல்ல 

மண்ணின் புழுதிகளை விட இங்கு -
மனிதப் புழுதிகளே 
அதிகம் - 
தேசத்தின் போக்கை 
இப்படியே விட்டால் வறுமையால்
 இறப்பவர்களால் 
ஒரு -
இமய மலையையே 
இங்கே உருவாக்க முடியும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக