வியாழன், 15 ஆகஸ்ட், 2013

எதிரிகளைத் தேடும் ஆவிகள்




           
என் உடல் உஷ்ணம் 
வியர்வை சிந்தும் படி 
வேதனைகளால் 
கசிந்து -ஈரம் 
ஊற் றெடுப்பதுண்டு !

சூரியன் தடவ .
கரங்கள் கைக்குட்டையை நாட 
கிளம்பும் புழுதிகளால் 
சுவாசம் 
தும்மலை விட ...
கைக் குட்டையை எடுத்து 
பௌடரைப் போட ...
வாசம் வீசும் 
தென்றலில் கலந்து 

சகீ
வந்து பாரதீ ...
என் 
வீட்டு முற்றத்தின் 
முன்னாலிருக்கும் 
மயானத்தில் 
எல்லாவற்ரையும் 
காணலாம் 
நேரில் ..

எமக்கும் மனப் பயம் 
சுரப்பதால் 
நமக்கு நாமே 
பாதுகாப்புத் தேடுகிறோம் !
துர்  நாற்றம்  வீசுகின்றது
அதனுள்ளே -
-
நரிகளும் '
நாய்களும் ..
பேய்களும் ...
வேட்டையாடுகின்றன !

எதிர் வரும் 
வெள்ளிக் கிழமை 
அவைகளுக்கு 
கொள்ளி வைக்கப் போகின்றேன் 

அப்போ -
சில நேரம் 
தீயிலே பாயும் 
அந்த ஆவிகள்
எதிரிகளை 
தேடிப் பிடிக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக