ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013




ஏக்கம் சுமந்த உள்ளம் 
தாக்கங்களில் மூழ்கும் 

காலச் சுழற்ச்சி வேகம் 
கற்பனைகளை ஜனித்து 
ஆசைக் கோட்டைக்கு 
அத்திவார்மிடும் 

ஏழ்மை வாழ்வுத் தீயில் 
இளமைத் தண்ணீர் 
வேகும்

நாதியற்ற தனிமை
நரகக் கோலம்
பூணும்

கனவு வேர் -அறுந்தே
கன்னிக் கொடி
தள்ளாடும்

பெண்மைப் பூவின் உதிரம்
மண்ணுக்கே -நல
உரமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக