வியாழன், 15 ஆகஸ்ட், 2013

புதுமாற்றம் கொண்டு வாராய்!



ஏகிவிட்ட இரண்டாயிரத்து பத்தைப்போல 
இல்லாது! நீ மலர்க! இரண்டயிரத்துப் பதினொன்றே!
சோக நிலை மாறி யொரு!சுகந்தம் வீச!
சுகம் பொங்க! வளம் பொங்க! வாழ்வில் நல்ல
மோக நிலை கொண்டே தன் மக்க ளெல்லாம்.
முடிவில்லா இன்பத்தைத் துய்க்கும் வண்ணம் 
இணையில்லா ஆண்டென்று இகமே போற்ற 
இரண்டாயிரத்து பதினொன்றே நீ இதமாய் வாராய்!

கொலை மலிந்து தலைபுரளக்! கோபம் கொண்டே!
கொடுவதைகள் செய்வோர்  தம் உள்ளம் மாறி                       
வலை போலச் சூழ்ந்துள்ள துயரம் நீங்கி
வசந்தங்கள் வந்தெம்மை மகிழ் விலாழ்த்த 
விலையில்லா அமைதியினை உலகுக்கின்று 
விதிமாற்றி இருளகற்றி ஒளியைச் சேர்த்து 
கலை மணக்கும் புத்தகமாய்! அகிலந் தன்னில்!
களிப்பூட்ட நீவாராய்  பதினொன்றே!

இனமென்றும் மொழியென்றும் மதங்களேன்றும்
இடைவெளியை ஏற்படுத்தும் மடமை நீங்கி 
மனமொன்று பட்டுலக மாந்தரெல்லாம் 
மாண்போடு! சோதரராய் வாழ்ந்து நிற்க!
தினந்தொரும்  ஏழ்மையிலே! வாடுவோர்கள் 
செழிப்போடு வாழுநிலை தன்னை ஆக்கி
கனவெல்லாம் வினையகிக் கண்டு உய்ய
கனிவோடு புதுமாற்றம்  கொண்டுவாராய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக