வியாழன், 15 ஆகஸ்ட், 2013

துயரம்



தொப்புள் கொடி  உறவு தந்த 
பாசம் எங்கு போனது ?
உடன் பிறப்பைத் தேடிச் சோர்ந்து போய் 
துயரம்  மனதில் துடிக்குது 

உறவு மகரந்தத்தை உறிஞ்சிக் கொண்டு 
வண்டு எங்கு பரந்தது ?
பச்சோலையை அறுத்துப் போடுவதற்காய் 
புதிய தென்னை தேடுது !

நேசித்த இதயத்தை பிரித்த பின்னர் 
பொறாமை எங்கு போகுது?
பொய்க்காக வாயை திறக்கும் 
நாவு ருசிக்க பழியைத் தேடுது !

விட்ட மூச்சு சுவாசிக்கும் காற்றில் 
வயது எங்கே போகுது ?
புதை குழியில் வாழ வேண்டித் 
நல்லமல்களை தேடுது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக