வியாழன், 15 ஆகஸ்ட், 2013

எழுத்து வீரமும் எழும் கவிதைகளும் ...........................................




நேர்மையின் விலகல்கள் 
உண்மைகளை  மறைக்கும் 

போலி வேஷங்கள் 
நாசத்தின் கருவாகி 
நடை போடும் 

தொடர்பறுந்த
சுகங்களைத் தேடி 
மனித உயிர் 
மண்டையை பிளக்கும் 

வாக்குக்குகளை வாதமாக்கி 
உலகியல் 
ஞானம் புதைக்கும் 
எழுத்து வீரம் 
எளிதில் மறையும் 

நிறமாறுதலும் 
நெளிந்தகோஷங்களும் 
நேர்மை விளிம்பில் 
கருகிப் போக -
கவிதை பிறக்கும் !










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக