வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நீயுமொரு நாள் கவிஞனாகிடலாம்




கவிஞனாக வேண்டு மென்றால்
சிந்தனை  தான் தேவை
மனசுக்குள் முயற்சியும்   
உள்ளத்தில் துணிவும்

பத்திரிகையில் எழுத வென்றால்
பேனாவும் பேனாவில் மையும்
பிரசுரம் பெற வேண்டுமென்றால் 
 திறமையும் நல்ல கருவும்(தரமும்) 

வாசிப்பவர் விமர்சிப்பார்
வாழ்த்துவரா தூற்றுவரா என்றே
கவலைப் பட்டால் ஆக முடியாது
கவிஞனாய் ஒரு போதும் 

கற்பனையில் வாழ்ந்திடாதே 
நிஜம் வராது மகிழ்வு தொடராது 
உலகமானது காத்திருக்காது 
கவிஞனுக்கு துணையாய் 

தூக்கியெடு பேனாவை
எழுதிச்செல் நல்லென்னங்களை 
வாசித்துப் படி கையில் கிடைப்பதை 
கவிஞனாகிடலாம் நீயுமொரு நாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக