வியாழன், 15 ஆகஸ்ட், 2013




இதயம் -
அழகாத்தான் உள்ளது ,
உணர்வில் தடவும்
அசிங்கத்தைத் தான் இன்னும்
கழுவிய பாடியில்லை ..!

இறை இல்லங்களுக்கு
தாக்குதல்களை ஏற்படுத்தும்
ஈரமில்லா இதயங்களை மட்டும்
நம் நேசக் கரங்கள்
கிழித்து விட்டால் .....?!

துரத்தி வரும்
இன்னல்களிலிருந்து
நம் இறை இல்லங்களை
அல்லாஹ்வின் -
நம்பிக்கையுடன்
காப்பாற்றி வைப்போம் ...!


எம் ஈமான்களில்
ஒட்டி யிருக்கும்
பொறுமையினை
பாராட்டியபடியே
காலம் -
சுவாசத்தில் கலந்து நம்மை
மூச்சோடு நிலைத்து
கோடி ஜென்மங்கள்
விண்ணும் மண்ணுமாய் வாழ்வதற்கற்கு
வாழ்த்தி நிற்கும் !

நோன்பினை பிடிக்கும் -நம்
இறை நம்பிக்கையினைப் பார்த்து
பொறுமை காக்கும்
வயிறும்
மகிழ்ச்சிகளை துவி மகிழும் !

நேச உறவுகளே ...
உள்ளங்களில் பதிந்திருக்கும்
நம்பிக்கை (பிடிவாத கொள்கைகளை )
இழந்து விடாதீர்கள்
நழுவி விடாதீர்கள் ...!

பிறகு .....
நன்மையெதுவுமின்றி
தீமைகளுடன் தான்
பொறாமை ஊற்றுக்களில்
விழி கழற்றியழுவோம் ....!

நம் பள்ளிகளை
தாக்க முனயுயும்
கடையர் உள்ளங்களை
ஈமானுக்கு மாற்றும் படியும் ,

நம் மதத்தினை
அழித்துவிட துடிக்கும்
அவஸ்த்தை மனங்களை
சிந்திக்கும் படியும்( மாற்றும் படியும்)

படைத்த நாயன்அல்லாஹ்விடம்
தொழுகையில்
பிராத்திப்போம்
முஸ்லிம்களே .....!

மொத்தத்தில்
நம்மை -
வேதனைச் செயல்களால் ......
மூடத் தனங்களால .....
பொறாமை உணர்வுகளால் ...
சாதி பேதங்களால் .....
பிடிவாதக் கொள்கைகளால் ....
பலத்கார மனங்களால் ....
உருட்டி விளையாடும்
பந்த்தடிக்கும் மனசுகளை
நேசத்தால் வெல்வோம் ...!
பாசத்தால் இணைப்போம் ..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக