வியாழன், 15 ஆகஸ்ட், 2013



உருவம் சிதைந்திட்ட 
உண்மைகள் 

கறைகளைப் பூசி 
மறை வேதம் மறந்த
எழுத்து நர்த்தனங்கள் 

பொல்லாத வாதங்களிலும் 
பொய்மையின்  தழுவலிலும் 
புளித்துப் போய் 
புழு அரித்துப் போன 
பேச்சுக்கள் 

போட்டி போட்டே 
அவரவர் -
தரங்களை நிர்ணையித்த 
அசிங்கங்கள் !

பழைய சிந்தனைகளை 
புதைத்தே எழும் 
என் -
புதுமைத் தத்துவங்கள் 

இன்று உனது 
நாளை எனதே என்ற 
என் இலட்சியங்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக