ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013



மரணத்தை நாடிப் பிறந்தவர்கள் 
நாம் -
வாழப் பிறந்தவர்கள் அல்ல 

இதயம் உண்டு 
எதையும் சுமக்க 

வாய் உண்டு 
கொடுமை மறைக்க 

மானம் உண்டு
மரியாதை காக்க

உள்ளம் உண்டு
அன்பை சுமக்க

அச்சம் உண்டு
இரையை வணங்க

எல்லாம் இருந்தும் ஏது பயன் ..?
உயிர் அற்றுப் போகும் உடம்பாச்சே
உடலை விட்டுப் போகும் உயிராச்சே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக