வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தலைக் கனமாய் வாழேன்




தூய இஸ்லாம்! வழியில் பிறந்தேழுந்தேன்!
மடமை யனைத்தையும் வீரமாய் துடைத்தெறிந்தேன் 
ஈமான் தனைக் கொண்டு  புத்தியாய்நடை பயின்றேன் 
மாற்றம் படைத்து வைப்பேன்! அறியமை அகற்றி வைப்பேன்

திருமறை ஓதலோடு: மார்க்கக் கல்வியை நான் கற்றேன்
உயிர் பிரியும் நாள் வரைக்கும் தீனுக்காய் நான் துடிப்பேன்
வீண் விரயயின்றி  இறை வழியில் செலவளிப்பேன்
சுவாசிக்கும் மூச்சியிலும் கலிமாச்சொல்லி மகிழ்றிருப்பேன்

அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றி நடந்த பெண்ணல்ல
உண்மை முஸ்லிம் வயிற்றில்! அவதரித்த ஈமானியப் பெண்
இறை வணக்கத்தை இன்பமுடன் கடைபிடித்தவள் யான் 
திசை மாறி வசை படி தலைக்கணமாய் வாழேன் யான்

மார்க்கப் போதனையை மழையாய் பொழியும்
தித்திக்கும் தேனாற்றல் தானாகப் பெற்றவள் நான்
எத்திசைப் போனாலும் என்னிதயம் அல்லாஹ்வை
வணங்கிப் போற்றிறிற்கும்! புகழினை பாடி நிற்கும்

2 கருத்துகள்:

  1. மனதை தொடும் வரிகள்
    இயல்பாய் வந்த வரிகள்
    இறைவனிடம் வேண்டும் வரிகள்
    இறைநேசரின் இதய வரிகள்
    விழிகளில் நீரை வரவைக்கும் வரிகள்
    இதயத்தை தொடும் வரிகள்
    மனதை நேர்மை படுத்தும் வரிகள்
    படிப்பவரும் இறை வழி நாடும் வரிகள்
    யாவரையும் கவரும் வரிகள்
    படித்து பரவசமடையும் வரிகள்
    வாழ்கையின் உயர்வை விரும்பும் வரிகள்
    மனதில் பதிந்துவிட்ட விட்ட வரிகள்
    உயர்ந்த வரிகளை உங்கள் மனதில் உதிக்க வைத்த இறைவனுக்கே புகழகனைத்தும்

    பதிலளிநீக்கு
  2. மனதை தொடும் வரிகள்
    இயல்பாய் வந்த வரிகள்
    இறைவனிடம் வேண்டும் வரிகள்
    இறைநேசரின் இதய வரிகள்
    விழிகளில் நீரை வரவைக்கும் வரிகள்
    இதயத்தை தொடும் வரிகள்
    மனதை நேர்மை படுத்தும் வரிகள்
    படிப்பவரும் இறை வழி நாடும் வரிகள்
    யாவரையும் கவரும் வரிகள்
    படித்து பரவசமடையும் வரிகள்
    வாழ்கையின் உயர்வை விரும்பும் வரிகள்
    மனதில் பதிந்துவிட்ட வரிகள்
    உயர்ந்த வரிகளை உங்கள் மனதில் உதிக்க வைத்த இறைவனுக்கே புகழனைத்தும்

    பதிலளிநீக்கு